Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மாணவர்களை மிரட்டும் ரிலையன்ஸ் நிறுவனம் - அன்புமணி குற்றச்சாட்டு

மாணவர்களை மிரட்டும் ரிலையன்ஸ் நிறுவனம் - அன்புமணி குற்றச்சாட்டு

மாணவர்களை மிரட்டும் ரிலையன்ஸ் நிறுவனம் - அன்புமணி குற்றச்சாட்டு
, வியாழன், 23 ஜூன் 2016 (15:31 IST)
கல்விக் கடனில், வராக் கடன்களை ரிலையன்ஸ் நிறுவனம் மாணவர்களிடம் மிரட்டி வசூல் செய்வதாக அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார்.
 

 
இது குறித்து, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், கல்விக் கடன் வாங்கி உயர்கல்வி படித்த மாணவர்கள் வேலை கிடைக்காமல் உள்ளனர்.
 
அவர்களிடமிருந்து கல்விக் கடனை வசூலிக்க பாரத ஸ்டேட் வங்கி மிகவும் கொடூரமான வழிமுறையை கையில் எடுத்துள்ளது.
 
மாணவர்களுக்கு வழங்கிய கல்விக் கடன்களில் வராக்கடன்களை ரிலையன்ஸ் நிறுவனத்திடம் அடிமாட்டு விலைக்கு விற்று, முழுத் தொகையையும் மாணவர் களிடமிருந்து வசூலித்துக் கொள்ள அனுமதி அளித்துள்ளது. ஸ்டேட் வங்கியின் இந்த செயல் கண்டிக்கத்தக்கதாகும்.
 
இந்தியாவில், தமிழகத்தில் தான் கல்விக் கடன் அதிகமாக வழங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் வழங்கப்பட்ட  ரூ.61,176 கோடி கல்விக் கடனில், தமிழகத்திலிருந்து மட்டும் 9.56 லட்சம் மாணவர்கள் ரூ.16,380 கோடியை கடன் பெற்றுள்ளனர். இதில், ரூ.1,875.56 கோடி மட்டும் வாராக்கடனாக உள்ளது.
 
இதில் பாரத ஸ்டேட் வங்கி மூலம் வழங்கப்பட்ட தொகை ரூ.847 கோடி ஆகும். இந்த வாரக் கல்விக் கடனை 45% தொகைக்கு ரிலையன்ஸ் கடன் வசூல் நிறுவனத்திடம் விற்பனை செய்துள்ளது.
 
இந்த நிலையில், வாராக்கடன்களை வாங்கிய ரிலையன்ஸ் நிறுவனம் கல்விக் கடனை திரும்ப செலுத்த முடியாத நிலையில் உள்ள மாணவர்களை மிரட்டி வருகிறது. இது கடும் கண்டனத்திற்குரிய செயல் என தெரிவித்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஓய்வெடுத்த தொழிலாளிகளை இரும்பு கம்பியால் தாக்கிய சூப்பர்வைசர்- வீடியோ