Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மின்சார ரயிலில் வௌவால் போல் தொங்கும் வாலிபர்கள்! – வைரலாகும் வீடியோ!

Webdunia
வியாழன், 29 செப்டம்பர் 2022 (08:52 IST)
சென்னை மின்சார ரயிலில் இளைஞர்கள் பலர் அபாயகரமாக தொங்கியபடி பயணித்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயணிக்க மின்சார ரயில், பேருந்து சேவைகளை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் கடந்த சில காலமாகவே மாணவர்கள் பலர் பேருந்து மற்றும் மின்சார ரயிலில் ஆபத்தான வகையில் மேற்கொள்ளும் சாகசங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.

இந்த வகை ஆபத்தான சாகசங்கள் மாணவர்களின் உயிருக்கே ஆபத்தாக முடிவதோடு மட்டுமல்லாமல், மற்ற பயணிகளுக்கும் பெரும் இடைஞ்சலாக மாறி வருகிறது. சமீபத்தில் சென்னை அரசு பேருந்தில் படிக்கட்டில் நின்று ரோட்டில் காலை தேய்த்தபடி வந்த மாணவர் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பப்பட்டார்.

ALSO READ: 4 ரூபாய்க்கு சேலை, வேஷ்டி, சட்டை: திருவாரூர் ஜவுளிக்கடையில் குவிந்த பொதுமக்கள்!

இந்நிலையில் தற்போது சென்னை மின்சார ரயிலில் கதவிற்கு வெளியே வௌவால் போல தொங்கியபடி இளைஞர்கள் சிலர் பயணம் செய்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ரயில்வே கோட்டம் மற்றும் ரயில்வே போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மாணவர்கள் குறித்து விசாரித்து வருவதாக ரயில்வே போலீஸார் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments