Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டை முற்றுகையிட முயன்ற மாணவி கைது

Webdunia
புதன், 4 ஏப்ரல் 2018 (11:19 IST)
தமிழக அரசை திரைமறைவில் இருந்து ஆட்டிப்படைப்பது பாஜக தான் என அனைத்து கட்சிகளும் குற்றஞ்சாட்டி வருகின்றன. குறிப்பாக துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி கட்டுப்பாட்டில்தான் தமிழக அரசு இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் சமீபத்தில் குருமூர்த்தி அளித்த பேட்டியில் தன்னை பார்த்த பின்னர்தான் ஓபிஎஸ் தர்மயுத்தம் தொடங்கினார் என்று கூறியது தமிழக அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது

இந்த நிலையில் தமிழக அரசை திரைமறைவில் இருந்து இயக்கி, அசாதாரணமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளதாக கூறி ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டை முற்றுகையிட சட்டக்கல்லூரி மாணவி நந்தினி இன்று முயற்சி செய்தார். இதனை அடுத்து போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்ட நந்தினி பின்னர் கைது செய்யப்பட்டார்.

மேலும் இந்த சம்பவத்தை அடுத்து மயிலாப்பூர் தியாகராஜபுரத்தில் உள்ள குருமூர்த்தி வீட்டுக்கு பலத்த போலீஸ்பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மாணவியின் நந்தினிக்கு நெட்டிசன்கள் ஆதரவு கொடுத்து வருகின்றனர். கைது செய்யப்பட்ட நந்தினியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று நெட்டிசன்கள் வலியுறுத்தியும் வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments