Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாதவிடாயால் ஒதுக்கப்பட்ட மாணவி? பள்ளி தலைமையாசிரியர் சஸ்பெண்ட்! - காவல்துறை அளித்த விளக்கம்!

Coimbatore school issue
Prasanth Karthick
வியாழன், 10 ஏப்ரல் 2025 (15:41 IST)

கோவையில் தேர்வு எழுத சென்ற பழங்குடி மாணவியை மாதவிடாய் காரணமாக வெளியே அமர வைத்த விவகாரத்தில் பள்ளி தலைமையாசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

 

கோவை அருகே உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பழங்குடி மாணவி ஒருவர் படித்து வந்துள்ளார். தற்போது பள்ளித் தேர்வுகள் நடந்து வரும் நிலையில் மாணவிக்கு முதல் மாதவிடாய் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படாமல் வெளியே வைத்து தேர்வு எழுதும்படி செய்யப்பட்டார்.

 

இதை அவரது தாயார் வீடியோ எடுத்து வெளியிட்டு நியாயம் கேட்ட நிலையில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதையடுத்து போலீஸார் விசாரணை மேற்கொண்டபோது, மாணவியின் தாயார்தான் அவர் மாதவிடாயில் உள்ளதால் தொற்று ஏற்படுமென தனியாக அமரவைத்து தேர்வு எழுத சொல்லி கேட்டதாக ஆசிரியர்கள் கூறியுள்ளனர். மாணவியின் தாயாரோ நான் தனியாக அமரவைத்துதான் தேர்வு எழுத சொன்னேன். வெளியே அமரவைக்க சொல்லவில்லை என்று கூறியுள்ளார்.

 

இந்த களேபரங்களுக்கு நடுவே, இதுகுறித்து நடவடிக்கை எடுத்த பள்ளியின் தாளாளர், அப்பள்ளியின் தலைமையாசிரியரை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளார், இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீ போகாத என்ன விட்டு..! தண்ணீர் பஞ்சத்தால் விட்டுச்சென்ற மனைவி! - கலெக்டரிடம் முறையிட்ட கணவன்!

ஏப்ரல் 16 முதல் இந்தியாவில் அறிமுகமாகும் Xiaomi Qled ஸ்மார்ட் டிவி.. என்னென்ன சிறப்பம்சங்கள்?

வக்பு மசோதா வாக்கெடுப்பில் பங்கேற்காத தமிழக எம்பி.. வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சா?

கவர்னருக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு பொன்னெழுத்துகளில் பொறிக்கப்படும்: முதல்வர் ஸ்டாலின்

பாமகவில் ஜனநாயக கொலை! - ராமதாஸ் முடிவுக்கு அன்புமணி ஆதரவாளர்கள் எதிர்ப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments