Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்வுத்தாளில் சினிமா பாடலை எழுதிய மாணவன்… ஆசிரியர் கண்டித்ததால் எடுத்த சோக முடிவு!

Webdunia
திங்கள், 8 மார்ச் 2021 (09:46 IST)
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த ஒட்டத்தெரு கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக் (17). இவர் அங்குள்ள அரசுப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். தேர்வுகள் தொடங்க உள்ளதால் பள்ளியில் மாணவர்களுக்கான வகுப்பு தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன. இதில் மாணவர் கார்த்திக் தாவரவியல் தேர்வில் தெரியாத கேள்விகளுக்கு சினிமா பாடல்களை பதிலாக எழுதி வைத்துள்ளார். இதைக் கண்டு பிடித்த ஆசிரியர் சகாதேவன், மாணவர்கள் முன் அதைப் படித்துக் காட்டியும், பெற்றோரை அழைத்துதான் வரவேண்டும் என கார்த்திக்கிடம் கூறியுள்ளார்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான கார்த்திக், வீட்டில் இரவில் எல்லோரும் தூங்கும் போது தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மத்தியில் மிகப்பெரிய சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜிப்லி புகைப்படம் எடுத்தால் சைபர் குற்றமா? காவல்துறை எச்சரிக்கை..!

2 வருடங்கள் தலைமறைவாக இருந்த செந்தில் பாலாஜி சகோதரருக்கு உடனே ஜாமின்.. நீதிபதி உத்தரவு..!

இன்றும் நாளையும் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த செந்தில்பாலாஜி சகோதரர் நீதிமன்றத்தில் ஆஜர்.. பரபரப்பு தகவல்..!

நண்பருக்கு கடன் வாங்கி கொடுத்தவர் தற்கொலை.. கடைசி நிமிடத்தில் மனைவியுடன் வீடியோ கால்..!

அடுத்த கட்டுரையில்
Show comments