Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீட் தேர்வு ஹால் டிக்கெட் ஐடி…. மறந்ததால் மாணவி எடுத்த சோக முடிவு!

Webdunia
புதன், 2 செப்டம்பர் 2020 (12:15 IST)
புதுக்கோட்டை அருகே நீட் ஹால் டிக்கெட் ஐடியை மறந்துவிட்டதால் மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவரின் மகள்,ஹரிஷ்மா. இவர் கடந்த ஆண்டு 12 ஆம் வகுப்பு முடித்துள்ளார். மேலும் மருத்துவர் ஆகவேண்டும் என்ற ஆசையில் நீட் தேர்வுக்காக கடுமையாக படித்துள்ளார்.

இந்நிலையில் நீட் தேர்வில் விண்ணப்பித்தவர்களுக்கு வழங்கப்படும் ஹால் டிக்கெட் ஐடி சமீபத்தில் இவருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதை இவர் மறந்து விட்டதால் இவரால் ஹால் டிக்கெட்டை டவுன்லோட் செய்ய முடியவில்லை. நீட் தேர்வை எழுத முடியாமல் போய்விடுமோ என்ற பதற்றத்தில் இருந்துள்ளார். மேலும் அவரது தாயாரும் அவரைத் திட்டியதால் மன உளைச்சலுக்கு ஆளான ஹரிஷ்மா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சி மருந்தைக் குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பல்வேறு யூனியன் பிரதேசங்களில் இருந்து 500 பள்ளிகள் பங்கு கொண்ட மாபெரும் இறகு பந்து போட்டி

அதிகாரத்தில் உள்ளவர்களின் ஆசியுடன் போதைப்பொருள் விநியோகம்: தமிழக அரசின் மீது ஆளுநர் ரவி குற்றச்சாட்டு

கேரளா கல்லூரியில் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை நாள் அனுசரிப்பு.. மாணவர்களிடையே கடும் மோதல்..!

ஜம்மு - காஷ்மீரில் மேக வெடிப்பு: 33 பேர் உயிரிழப்பு, 200-க்கும் மேற்பட்டோர் மாயம்

நாளை ஆளுனரின் தேநீர் விருந்து.. புறக்கணிக்க முதல்வர் ஸ்டாலின் முடிவு

அடுத்த கட்டுரையில்
Show comments