Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நீட் தேர்வு பயத்தில் மாணவி தற்கொலை முயற்சி...

mother
, வெள்ளி, 22 ஜூலை 2022 (22:22 IST)
திருவள்ளூரில்  நீட் தேர்வு எழுதிய மாணவி நீட் தேர்வு முடிவு பயத்தால் தற்கொலை செய்து முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் கடந்த 17 ஆம் தேதி மருத்துவப் படிப்பிற்கான நுழைவுத் தேர்வு நடந்தது. இந்தத் தேர்வில் திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட  பெரியகுப்பம் எம்.ஜி.ஆர் நகரில் பெற்றோருடன் வசித்து வரும் மாணவி ஒருவர் தேர்வு எழுதி இருந்தார்.

இந்த நீட் தேர்வில் மதிப்பெண்கள் குறைந்துவிடுமோ என்ற பயத்தில் இருந்த மாணவி  வீட்டில் இருந்த வார்னிஷை குடித்துத் தற்கொலைக்கு முயன்றார்.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மாணவியை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.மாணவி உடல் ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.  மருத்துவமனையில் மாணவியின் தாய் கதறி அழுத வீடியோ வைரலாகி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முக்கிய நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு?