Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சத்துணவு முட்டையை பதுக்கிய ஊழியர்கள்! தட்டிக்கேட்ட மாணவனுக்கு அடி உதை! திருவண்ணாமலையில் அதிர்ச்சி!

Prasanth Karthick
வெள்ளி, 4 ஏப்ரல் 2025 (15:15 IST)

திருவண்ணாமலையில் சத்துணவு முட்டை விவகாரத்தில் மாணவனை ஊழியர்கள் தாக்கிய விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

தமிழ்நாடு முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாநில அரசின் சத்துணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சத்துணவில் வாரம்தோறும் சத்தாண உணவுகள், முட்டை, பயறு வகைகள் உள்ளிட்டவை ஒவ்வொரு நாளும் வழங்கப்பட்டு வருகின்றன

 

திருவண்ணாமலையில் உள்ள பள்ளி ஒன்றில் அவ்வாறாக மாணவன் ஒருவன் சத்துணவு பெற சென்றபோது அவனுக்கு சத்துணவு ஊழியர்கள் முட்டை வைக்கவில்லை என தெரிகிறது. அதுகுறித்து மாணவன் கேட்டபோது அவர்கள் முட்டை இல்லை என கூறியுள்ளனர். இதனால் மாணவன் சத்துணவு சமையலறையில் சென்று பார்த்தபோது முட்டை இருந்துள்ளது.

 

இதுகுறித்து முட்டையை வைத்துக் கொண்டே ஏன் இல்லை என்று சொல்கிறீர்கள் என மாணவன் கேள்வி எழுப்பியதால் ஆத்திரமடைந்த சத்துணவு ஊழியர்கள் மாணவனை ‘ஏன் சமையலறையில் சென்று பார்த்தாய்?” என கேட்டு துடைப்பம் உள்ளிட்டவற்றால் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

 

இந்த வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் கோபக்கனல்களை உருவாக்கியுள்ள நிலையில் இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பைக்கில் சென்று கொண்டிருந்த போது திடீரென படம் எடுத்த பாம்பு.. இளைஞர் பரிதாப பலி..!

ஏப்ரல் 9ஆம் தேதி மீண்டும் அனைத்து கட்சி கூட்டம்.. முதல்வர் அறிவிப்பு.. என்ன காரணம்?

ராமேஸ்வரம் வரும் பிரதமர் மோடி.. ஈபிஎஸ், ஓபிஎஸ் தனித்தனியாக சந்திக்க திட்டம்..!

கேரள முதல்வர் மகள் மீது லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டு.. பதவி விலக வலியுறுத்தும் எதிர்க்கட்சிகள்..!

மதுரை சித்திரை திருவிழா.. முகூர்த்தக்கால் நட்டு நிகழ்ச்சி தொடக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments