Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடும் எதிர்ப்பு எதிரொலி.. காலை உணவு திட்டத்தை தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டம் ரத்து..!

Siva
வெள்ளி, 31 ஜனவரி 2025 (08:22 IST)
பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு தயாரிக்கும் திட்டத்தை தனியாரிடம் ஒப்படைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்ட நிலையில் இதற்கு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து தற்போது இந்த திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளுக்கு காலை உணவு தயாரிக்கும் பணியை தனியாருக்கு வழங்குவதற்கான ஒப்பந்தம் கூறும் அறிவிப்பை மாநகராட்சி வெளியிட்ட நிலையில் இதற்கு அதிமுக பாஜக உள்ளிட்ட பல கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில் சென்னை மேயர் பிரியா இது குறித்து தெரிவித்தபோது, ‘பள்ளி குழந்தைகளுக்கு உணவு தயாரிக்கும் பணியை தனியாருக்கும் வழங்கும் ஒப்பந்த அறிவிப்பை மாநகராட்சி நிர்வாக ரத்து செய்வதாகவும் மாநகராட்சியே இந்த திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் தமிழக அரசால் நடத்தப்பட்டு வரும் நிலையில் இந்த திட்டத்தின் படி உணவு தயாரிக்க தனியாருக்கு ஒப்பந்தம் கூறும் டெண்டர் சமீபத்தில் விடப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில் தான் தற்போது இந்த திட்டத்தை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவு ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments