Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடும் எதிர்ப்பு எதிரொலி.. காலை உணவு திட்டத்தை தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டம் ரத்து..!

Siva
வெள்ளி, 31 ஜனவரி 2025 (08:22 IST)
பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு தயாரிக்கும் திட்டத்தை தனியாரிடம் ஒப்படைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்ட நிலையில் இதற்கு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து தற்போது இந்த திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளுக்கு காலை உணவு தயாரிக்கும் பணியை தனியாருக்கு வழங்குவதற்கான ஒப்பந்தம் கூறும் அறிவிப்பை மாநகராட்சி வெளியிட்ட நிலையில் இதற்கு அதிமுக பாஜக உள்ளிட்ட பல கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில் சென்னை மேயர் பிரியா இது குறித்து தெரிவித்தபோது, ‘பள்ளி குழந்தைகளுக்கு உணவு தயாரிக்கும் பணியை தனியாருக்கும் வழங்கும் ஒப்பந்த அறிவிப்பை மாநகராட்சி நிர்வாக ரத்து செய்வதாகவும் மாநகராட்சியே இந்த திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் தமிழக அரசால் நடத்தப்பட்டு வரும் நிலையில் இந்த திட்டத்தின் படி உணவு தயாரிக்க தனியாருக்கு ஒப்பந்தம் கூறும் டெண்டர் சமீபத்தில் விடப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில் தான் தற்போது இந்த திட்டத்தை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவு ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காதலுக்கு எதிர்ப்பு; தாயை கொல்ல காதலனை ஏவிய 15 வயது சிறுமி!

பைக்கில் டிரிபிள்ஸ் வந்த இளம்பெண்கள்.. கன்னத்தில் அறைந்த காவல்துறை அதிகாரியால் பரபரப்பு..!

ஆகஸ்ட் 15 முதல் சுற்றுப்பயணம், ரோட் ஷோ.. களத்தில் இறங்குகிறார் தவெக விஜய்..!

சமூகநீதி நாயகன் வி.பி.சிங் ஆன்மா.. தமிழக ஆட்சியாளர்கள் கண்களை திறக்கட்டும்?! - யாரை அட்டாக் செய்கிறார் அன்புமணி?

பொய் புளுகி மீடியாக்களை நம்பாதீங்க.. ஈரான் அணுசக்தி தளங்களை அழிச்சாச்சு! - ட்ரம்ப் திட்டவட்டம்!

அடுத்த கட்டுரையில்
Show comments