Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அந்தமான் அருகே புயல் சின்னம்; தமிழகத்தில் கனமழை

Webdunia
ஞாயிறு, 24 செப்டம்பர் 2017 (20:04 IST)
அந்தமான் அருகே கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி இருப்பதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


 

 
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் உள்ள சில ஆறுகளில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழையும் சில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்று சில இடங்களில் மழை பெய்து சென்னை வாசிகளை குளிர வைத்தது.
 
தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வந்தாலும் சென்னை கடுமையாக வெயில் இருந்த நிலையில் இன்று காலை முதல் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தற்போது மழை பெய்து வருகிறது.

சிறுவன் உயிரிழந்ததன் எதிரொலி.! வனத்துறை வசம் செல்கிறது குற்றால அருவிகள்..!!

புது உச்சத்தை நோக்கி தங்கம் விலை.. ரூ.55000ஐ நெருங்கியது ஒரு சவரன் விலை..!

ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!

மகளுக்கு சேர்த்து வைத்த 100 பவுன் நகை கொள்ளை.. ஓய்வுபெற்ற துணை வேந்தர் வீட்டில் திருட்டு..!

மழைக்காலத்தில் கூட இப்படி இல்லையே.. குன்னூரில் 17 செ.மீ. மழைப்பதிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments