Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பசுமாட்டை கடித்து குதறிய தெருநாய்கள்.. பரிதாபமாக இறந்த பசுமாடு..!

Mahendran
வியாழன், 20 மார்ச் 2025 (12:27 IST)
சேலம் அருகே பசுமாடு கடத்தல் காரணமாக, தெரு நாய்கள் கடித்து குதறியதால் ஒரு பசுமாடு பரிதாபமாக இறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
சேலத்தைச் சேர்ந்த 55 வயது மீனா என்பவர் 15க்கும் மேற்பட்ட பசுமாடுகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில், திடீரென கூட்டமாக வந்த தெரு நாய்கள், ஒரு பசுமாட்டை கடித்து குதறின. கழுத்து மற்றும் பின் பகுதியில் ஏற்பட்ட ரத்த காயங்களுடன் அது கிடந்தது. வெறிநாய்கள் கடித்ததன் தாக்குதலால் சில நிமிடங்களில் அந்த பசுமாடு உயிரிழந்தது.
 
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மீனா கதறி அழுதார். பின்னர், கால்நடைத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அந்த பகுதியில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதாகவும், உடனடியாக கால்நடைகளையும் மனிதர்களையும் பாதுகாக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
 
"மாடுகளை வைத்தே நான் பிழைப்பு நடத்தி வருகிறேன். ஏற்கனவே சில மாடுகளை நாய்கள் கடித்த நிலையில், அதை விரட்டியிருக்கிறேன். ஆனால் நேற்று இரவு நாய்கள் மீண்டும் கடித்தது எனக்குத் தெரியவில்லை. இன்று காலை வந்து பார்த்தபோது, மாடு இறந்திருந்தது," என்று மீனா கூறினார்.
 
இதனை அடுத்து, தெரு நாய்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்துவிட்டு அந்த இடத்தைவிட்டு சென்றனர்.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆண்டுக்கு இனி 15 சிலிண்டர் மட்டும்தான்! எண்ணெய் நிறுவனங்கள் புதிய விதிமுறை!

ஆட்டோ ஓட்ட விரும்பும் பெண்களுக்கு ‘பிங்க் ஆட்டோ’ - முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்!

ஒவ்வொரு தாம்பத்ய உறவுக்கும் ரூ.5000 கேட்ட மனைவி.. போலீசில் புகார் அளித்த கணவர்..!

அண்ணாமலை தரம் தாழ்ந்து விஜய்யை விமர்சனம் செய்தது கண்டிக்கத்தக்கது: தவெக கண்டனம்..!

மற்றுத்திறனாளிகளுக்ககு ஸ்கூட்டர்.. திருப்பத்தூர் வரை நான்கு வழிச்சாலை.. சட்டசபையில் முக்கிய அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments