Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடிநீர் டேங்க்கில் கலக்கப்பட்ட மலம்; மக்கள் வாந்தி, மயக்கம்! – புதுக்கோட்டையில் அதிர்ச்சி!

Webdunia
செவ்வாய், 27 டிசம்பர் 2022 (09:36 IST)
புதுக்கோட்டையில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர் டேங்க்கில் மர்ம ஆசாமிகள் மலத்தை கலந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோப்புப்படம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வேங்கைவாசல் என்ற பகுதியில் இறையூர் வேங்கைவாசல் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் ஒரு பகுதியில் பட்டியலின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு அங்கு ஒரு குடிதண்ணீர் டேங்க்கும் கட்டப்பட்டு புழக்கத்தில் உள்ளது.

சில நாட்களாக டேங்க் தண்ணீரை குடித்த மக்கள் சிலருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. குடி தண்ணீரால் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் கூறியதால் டேங்க்கை திறந்து பார்த்தபோது அதில் மனித மலம் கலக்கப்பட்டிருந்தது அம்மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

உடனடியாக தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு டேங்க் சுத்தம் செய்யும் பணிகள் நடந்து வருகின்றது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edit By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

தடுப்பணை பணிகளை நிறுத்துங்கள்.! கேரள முதல்வருக்கு தமிழக முதல்வர் கடிதம்..!!

மாட்டிறைச்சியை செய்யுங்கள்...! விரும்பி சாப்பிடத் தயாராக இருக்கிறோம்..! அண்ணாமலைக்கு ஈவிகேஎஸ் பதிலடி!

கூகுள் நிறுவன அதிகாரிகள் சென்னை வருகை.. முதல்வர் ஸ்டாலினை சந்திக்க திட்டம்?

காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் தமிழ்நாட்டில் 1.21 கோடி மரங்கள் நட இலக்கு! - பொள்ளாச்சி திமுக எம்.பி. முதல் மரக்கன்றை நட்டு தொடங்கி வைத்தார்!

எங்களுக்கே இலவசம் இல்லையா.? அரசு பேருந்துகளுக்கு அபராதம் விதித்த போக்குவரத்து போலீசார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments