கராத்தே மாஸ்டரை கடத்தி கும்மியெடுத்த கும்பல்! – பரபரப்பு வாக்குமூலம்!

Webdunia
செவ்வாய், 30 நவம்பர் 2021 (11:51 IST)
சேலத்தில் பாலியல் புகாரில் கைதான கராத்தே மாஸ்டரை முன்னரே ஒரு கும்பல் கடத்தி தர்ம அடி கொடுத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சேலம் மாவட்டம் சீலியம்பட்டி அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் கராத்தே மாஸ்டர் ராஜா மீது புகார் அளிக்கப்பட்ட நிலையில் அவர்மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் விசாரணை மேற்கொண்ட நிலையில் அவர் கடத்தப்பட்ட சம்பவம் தெரிய வந்துள்ளது. போலீஸார் கைது செய்யும் முன்னதாக ராஜாவுக்கு போன் செய்த மர்ம கும்பல் உணவுக்கு மொத்த ஆர்டர் கொடுப்பது போல வர சொல்லி அவரை கடத்தியுள்ளனர். 8 பேர் கொண்ட கும்பல் அவரை கடத்தி சென்று தாக்கியுள்ளனர். பின்னர் அவரிடம் இருந்த பணத்தை பறித்துக் கொண்டு அவரை விரட்டியுள்ளனர். அதன் பிறகு போலீஸார் அவரை கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் தன்னை தாக்கிய 8 பேர் கொண்ட கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கராத்தே மாஸ்டர் ராஜா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கராத்தே மாஸ்டரை கடத்திய கும்பல் பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்களா? அல்லது வேறு யாருமா? என்பது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இட்லி, வடை, தோசை சாப்பிடுவது போன்ற ஒரு சாதாரண சந்திப்பு.. விஜய் சந்திப்பு குறித்து பிரவீன் சக்கரவர்த்தி

உபியில் 2.45 கோடி வாக்காளர் படிவங்கள் திரும்ப வரவில்லை.. SIRஆல் பாஜகவுக்கு சிக்கலா?

ஸ்விக்கி, ஸொமட்டோ டெலிவரி ஊழியர்கள் லிஃப்டை பயன்படுத்த கூடாது.. போர்டு வைத்து சிக்கலில் சிக்கிய ஓட்டல்..!

வெங்காயம் - பூண்டு சண்டையால் விவாகரத்து! 23 வருட திருமண உறவுக்கு முடிவு..!

விஜய் பொதுக்கூட்டத்துக்கு துப்பாக்கியுடன் வந்தவர் விடுவிப்பு: என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்