வங்கக் கடலில் உருவானது ‘ஆம்பன்’ புயல்! - வானிலை மையம் இயக்குநர் தகவல்

Webdunia
சனி, 16 மே 2020 (19:37 IST)
வங்க கடலில் சில நாட்களுக்கு முன்பாக உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்ததை தொடர்ந்து இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது இதனைத்தொடர்ந்து புயலாக மாறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   

இந்த புயல் நாளை வரை வடமேற்கு திசை நோக்கி நகரும், பின்னர் திசையை மாற்றி வடக்கு வடகிழக்கு திசையில் நகர்ந்து செல்லும். 20 ஆம் தேதிக்கு பின்னர் மேற்கு வங்கம் அல்லது பங்களாதேஷ் ஒட்டிய பகுதியில் கரையை கடக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.  

இதனால் தமிழகத்தில் நேரடி மழை இருக்காது, ஆனால் புயல் விலகி செல்வதால் கடலோர மாவட்டங்களில் வெப்பநிலை உயர வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர். தற்போதைய தகவலின் படி வட தமிழகத்தில் 2 - 3 டிகிரி செல்சியஸ் அளவிற்கு உயரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் கூறியுள்ளதாவது ;

தென் மேற்கு வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்தம் புயல் ஆனது சென்னைக்கு தென் கிழக்கே 670 கி.மீ தொலைவில் ஆம்பன் புயல் மையம் கொண்டுள்ளது. வடமேற்கு திசையில் மணிக்கு 16கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது என தெரிவித்துள்ளார்.

மேலும்.இந்தப்புயலானது மே 20 ஆம் தேதி வங்கக் கடல், மேற்குவங்கத்தை ஒட்டிய பகுதிகளில் ஆம்பன் கரையைக் கடக்கும் என தெரிவித்துள்ளர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏற்ற இறக்கத்தில் பங்குச்சந்தை.. இன்று மீண்டும் சரிவு.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!

நவம்பர், டிசம்பரில் வலுவான புயல்கள் உருவாக வாய்ப்பு! - சுயாதீன வானிலை ஆய்வாலர் டெல்டா வெதர்மேன் கணிப்பு!

15 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்.. நீதிமன்ற விசாரணை நடந்து கொண்டிருந்தபோதே குழந்தை பெற்றதால் அதிர்ச்சி..!

எவ்வளவு விழிப்புணர்வு ஏற்படுத்தியும் பயனில்லை.. டிஜிட்டல் அரேஸ்ட்டில் ரூ.50 லட்சம் ஏமாந்த முதிய தம்பதி..!

சூடானில் உள்நாட்டு போர் தீவிரம்.. ராணுவமே சொந்த நாட்டு மக்கள் 460 பேரை கொன்ற கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments