வங்கக் கடலில் புயல் ; தீபாவளி தப்பிக்குமா?

Webdunia
வெள்ளி, 13 அக்டோபர் 2017 (10:39 IST)
வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் காரணமாக தமிழகமெங்கும் தீபாவளியன்று கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.


 

 
தீபாவளி பண்டிகை வருகிற 18ம் தேதி கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் தமிழகத்தில் தீபாவளியன்று மழை பெய்வது வழக்கமான ஒன்றுதான்.  ஆனால், இந்த முறை தீபாவளியன்று புயலை சந்திக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
 
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அக்.15ம் தேதியன்று வங்க கடலில் வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். அது மேலும் வலுவடைய அதிக வாய்ப்புள்ளது” எனக் கூறப்பட்டுள்ளது.
 
அப்படி அந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று, காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அதன் பின் அக்.18ம் தேதி அது புயலாகவும் மாற வாய்ப்பிருக்கிறது என நம்பப்படுகிறது. ஆனால், அது புயலாக மாறுமா என்பது அக்.16ம் தேதி தெரிந்துவிடும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.
 
புயலாக மாறினால், அது ஒடிசா அல்லது ஆந்திராவின் விசாகப்படினத்தை தாக்கும் எனவும், புயலாக மாறவிடில், 18ம் தேதிக்கு பின் தமிழகம், புதுச்சேரி மற்றும் ஆந்திர மாநிலங்களில் கனமழை பெய்யும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மாதமாக மிரட்டி தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்: ஈபிஎஸ் கண்டனம்..!

விஜய் கிரிக்கெட் பால் மாதிரி!.. அவருக்குதான் என் ஓட்டு!.. பப்லு பிரித்திவிராஜ் ராக்ஸ்!...

20 வருடங்களாக வைத்திருந்த உள்துறையை பாஜகவுக்கு தாரை வார்த்த நிதிஷ்குமார்.. என்ன காரணம்?

7ஆம் வகுப்பு மாணவி பள்ளி மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு: ஆசிரியர்கள் மீது பெற்றோர் குற்றச்சாட்டு

கோவை மெட்ரோ.. திருப்பி அனுப்பிய மத்திய அரசின் அறிக்கையில் 3 முக்கிய விளக்கம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments