Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்க தயார்.. எலெக்‌ஷன் கமிஷன் பதில்

Arun Prasath
வியாழன், 5 டிசம்பர் 2019 (14:19 IST)
9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்க முடியுமா என உச்சநீதிமன்றம் கேள்விக்கு மாநில தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது.

3 வருடங்களுக்கும் மேலாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத நிலையில் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என அறிவித்தது. இதனிடையே மறுவரையறை பணிகள் முடிவடையாத வரை உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கூடாது என திமுக வழக்கு தொடுத்தது.

இந்த வழக்கு குறித்து விசாரித்த உயர்நீதிமன்றம், “தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் மறுவரையறை பணிகள் நிறைவடையாத நிலையில் உள்ளாட்சி தேர்தல் நடத்தினால் குழப்பம் வராதா?” மாநில தேர்தல் ஆணையத்திடம் கேள்வி எழுப்பியது.

இதனை தொடர்ந்து இதற்கு பதிலளித்த மாநில தேர்தல் ஆணையம், 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு படி, தொகுதி மறுவரையறை செய்யப்பட்டது. இனி 2021-ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்திய பிறகே மறுவரையறை செய்யப்படும் கூறியது

இதனை அடுத்து வார்டு மறுவரையறை பணிகள் முடிவடையாத புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் மட்டும் தேவைப்பட்டால் உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்க முடியுமா என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பாக தமிழக தேர்தல் ஆணையம் பிற்பகல் 2 மணிக்குள்ளேயே பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டது. இந்நிலையில் இதற்கு மாநில தேர்தல் ஆணையம் 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்க தயார் என பதிலளித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments