Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்க தயார்.. எலெக்‌ஷன் கமிஷன் பதில்

Arun Prasath
வியாழன், 5 டிசம்பர் 2019 (14:19 IST)
9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்க முடியுமா என உச்சநீதிமன்றம் கேள்விக்கு மாநில தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது.

3 வருடங்களுக்கும் மேலாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத நிலையில் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என அறிவித்தது. இதனிடையே மறுவரையறை பணிகள் முடிவடையாத வரை உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கூடாது என திமுக வழக்கு தொடுத்தது.

இந்த வழக்கு குறித்து விசாரித்த உயர்நீதிமன்றம், “தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் மறுவரையறை பணிகள் நிறைவடையாத நிலையில் உள்ளாட்சி தேர்தல் நடத்தினால் குழப்பம் வராதா?” மாநில தேர்தல் ஆணையத்திடம் கேள்வி எழுப்பியது.

இதனை தொடர்ந்து இதற்கு பதிலளித்த மாநில தேர்தல் ஆணையம், 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு படி, தொகுதி மறுவரையறை செய்யப்பட்டது. இனி 2021-ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்திய பிறகே மறுவரையறை செய்யப்படும் கூறியது

இதனை அடுத்து வார்டு மறுவரையறை பணிகள் முடிவடையாத புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் மட்டும் தேவைப்பட்டால் உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்க முடியுமா என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பாக தமிழக தேர்தல் ஆணையம் பிற்பகல் 2 மணிக்குள்ளேயே பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டது. இந்நிலையில் இதற்கு மாநில தேர்தல் ஆணையம் 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்க தயார் என பதிலளித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து ராணா வருகை எதிரொலி: முக்கிய மெட்ரோ ரயில் நிலையம் மூடல்..!

கோவில் மேல் விழுந்த பழமையான ஆலமரம்.. பலர் பலி என அச்சம்..!

இன்று குருமூர்த்தியை சந்தித்த அண்ணாமலை.. நாளை அமித்ஷா - குருமூர்த்தி சந்திப்பு.. பாஜகவில் பரபரப்பு..!

துண்டுச்சீட்டில் கேள்விகளை எழுதி கொடுத்த திமுக எம்பி.. இந்த கேள்விகள் மட்டும் தான் கேட்க வேண்டும்?

நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments