Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போலி நகைகளை அடகு வைத்து வங்கி ஊழியர்களே மோசடி

Webdunia
வெள்ளி, 14 அக்டோபர் 2016 (10:54 IST)
புதுக்கோட்டையில் உள்ள வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து வங்கி ஊழியர்கள் ரூ.60 லட்சம் மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற் படுத்தியது.
 

 
புதுக்கோட்டை டிவிஎஸ் கார்னர் பகுதியில் ஸ்டேட் பேங்க் ஆப் திருவாங்கூர் வங்கிக் கிளை உள்ளது. இதில், கடந்த ஆண்டில் வெவ்வேறு தேதிகளில் புதுக்கோட்டையைச் சேர்ந்த பிரதீபா, விஜி, கார்த்திகேயன், குணசேகரன் உள்ளிட்ட 31 பேர் போலியான நகைகளை அடகு வைத்துள்ளனர்.
 
இந்நிலையில், போலி நகைகளை அடகு வைத்து சுமார் ரூ. 60 லட்சத்தை மோசடி செய்துவிட்டதாக வங்கியின் கிளை மேலாளர் கோபால கிருஷ்ணன், புதுக்கோட்டையில் உள்ள மாவட்டக் குற்றப் பிரிவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புகார் அளித்துள்ளார்.
 
இது தொடர்பாக காவல் துறையினர் குற்றம்சாட்டப்பட்டோரை விசாரணைக்கு அழைத்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்கள் போலியான நகைகளை தாங்கள் அடகு வைக்கவில்லை, தங்க நகைகளைத்தான் அடகு வைத்தோம் எனத் தெரிவித்தனர்.
 
இந்நிலையில், நான்கு நாட்கள் விடுமுறை முடிந்து வியாழக்கிழமை அன்று வங்கி திறக்கப்பட்டபோது, ஏமாற்றியதாக குற்றம்சாட்டப்பட்ட வாடிக்கையாளர்கள் 31 பேரும் வங்கியை முற்றுகையிட்டனர். போலி நகைகளை அடகு வைக்கவில்லை என அலுவலர்களிடம் முறையிட்டனர். இதனால் அங்கு கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
 
இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறும்போது, ”நாங்கள் தங்க நகைகளைத்தான் இந்த வங்கியில் அடகு வைத்தோம். ஆனால், இந்த வங்கியின் நகை மதிப்பீட்டாளர் சிவக்குமார் மற்றும் வங்கியின் சில அலுவலர்கள், நாங்கள் தங்க நகைகள் அடகு வைத்தபோது வேறொரு படிவத்தில் எங்களுக்குத் தெரியாமல் எங்களிடமே கையெழுத்துப் பெற்று அதில் போலி நகைகளை அடகு வைத்து மோசடி செய்துள்ளனர். இதை அங்குள்ள கண் காணிப்பு கேமரா மூலம் ஆய்வு மேற்கொண்டால் தெரிந்துவிடும்” என்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஆடி காா்த்திகை விரதம்: முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு.. குவிந்த பக்தர்கள்..!

இன்றிரவு கொட்டப்போகுது கனமழை.. சென்னை உள்பட 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

சேலத்தில் தவெகவின் முதல் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்: தேதி அறிவிப்பு..!

தீர்ப்புகள் தயாரிக்க AI தொழில்நுட்பம் பயன்படுத்தலாமா? கேரள உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

துணை முதல்வர் நயினார் நாகேந்திரன்.. மேடையில் அறிவித்த பெண் பாஜக தொண்டரால் சலசலப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments