Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தொடங்கியது விறுவிறுப்பான வாக்குப்பதிவு - கொட்டும் மழையிலும் வாக்காளர்கள் ஆர்வம்

தொடங்கியது விறுவிறுப்பான வாக்குப்பதிவு - கொட்டும் மழையிலும் வாக்காளர்கள் ஆர்வம்
, திங்கள், 16 மே 2016 (07:37 IST)
தமிழகத்தில் 15வது சட்டப்பேரவையை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று திங்கட்கிழமை (மே 16) நடைபெறுகிறது. ஒரு மாதம் நடைபெற்ற அனல் பறக்கும் பிரச்சாரம் சனிக்கிழமை மாலையுடன் ஓய்ந்தது.
 

 
மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் ஆகிய இரண்டு தொகுதியிலும் வாக்காளர்களுக்கு பணமும், பரிசுப் பொருட்களும் விநியோகிக்கப்படுவதாக வந்த புகாரின் பேரில் அங்கு தேர்தல் மட்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அங்கு 23ம் தேதி ஓட்டுப்பதிவு நடைபெறும், 25ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
 
இதனால் அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் தவிர மற்ற 232 தொகுதிகளிலும் இன்று [16-05-16] திங்கட்கிழமை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.
 
மொத்தம் 5 கோடியே 82 லட்சம் வாக்காளர்கள் வாக்களித்து தங்களது பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க உள்ளனர். வாக்களிப்பதற்காக மாநிலம் முழுவதும் மொத்தம் 66 ஆயிரத்து 7 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 234 தொகுதிகளில் 3,454 ஆண் வேட்பாளர்கள், 320 பெண் வேட்பாளர்கள், திருநங்கைகள் 2 பேர் என மொத்தம் 3,776 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
 
தமிழக்கத்தில் ஏற்பட்டுள்ள குறைந்தழுத்த தாழ்வு மையம் காரணமாக தமிழ்நாட்டின் பல இடங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. ஆனாலும், வாக்காளர்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொசுகள் ஏன் கடிக்கின்றன?