Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனசாட்சியோடு நடந்துக்கோங்க ராஜபக்‌ஷே! - ஸ்டாலின் அட்வைஸ்!

Webdunia
திங்கள், 18 நவம்பர் 2019 (14:24 IST)
இலங்கையில் மீண்டும் ராஜபக்‌ஷே அதிபராகி உள்ள நிலையில் அவருக்கு வேண்டுகோள் விடுக்கும் வகையில் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இலங்கை அதிபர் தேர்தலில் மீண்டும் மஹிந்த ராஜபக்‌ஷே அதிக வாக்குகள் வென்று அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ராஜபக்‌ஷே காலத்தில் இலங்கையில் ஈழ தமிழர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் உலகையே உலுக்கிய நிலையில், மீண்டும் அவர் ஆட்சிக்கு வந்திருப்பது உலக தமிழர்கள் பலரை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

இலங்கை அதிபராக ராஜபக்‌ஷே தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு பிரதமர் மோடி வாழ்த்து கூறியுள்ளார். இந்நிலையில் அறிக்கை வெளியிட்டுள்ள திமுக தலைவர் ஸ்டாலின் “ராஜபக்‌ஷே வெற்றி உலக தமிழர்களை அச்சம் கொள்ள செய்திருக்கிறது. அவரது பழைய வரலாறு ஈழத்தமிழ் மக்களுக்கு எதிரானது என்பதையும், அதனால் ஏற்பட்ட கோடூரமான விளைவுகளையும் உலகமே அறியும். இனியாவது ராஜபக்‌ஷே சமத்துவத்துடனும், மனித நேயத்துடனும் நடந்து கொள்ள வேண்டும், மத்தியில் ஆளும் பாஜக மற்றும் பிரதமர் மோடி தமிழர்களின் நலனை உறுதிசெய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments