Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்திற்கு கூடுதல் ஆக்சிஜன்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

Webdunia
வெள்ளி, 7 மே 2021 (21:58 IST)
தமிழகத்திற்கு கூடுதல் ஆக்சிஜன் தேவை என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இந்திய பிரதமர் மோடி அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார் 
 
தமிழ் நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. இன்று தமிழகத்தில் 26 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களும், சென்னையில் சுமார் 7 ஆயிரம் பேர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்தநிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தேவையான மருந்து பொருட்கள் மற்றும் ஆக்சிஜன் உடனடியாக தமிழகத்திற்கு அனுப்ப வேண்டும் என தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்
 
அந்த கடிதத்தில் தமிழ்நாட்டிற்கு உடனடியாக கூடுதல் ஆக்சிஜனையும் ஆக்சிஜனை எடுத்துச் செல்ல கிரையோஜனிக் கண்டெய்னர்களையும் வழங்க கோரி பிரதமருக்கு முக ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த வேண்டுகோளின் அடிப்படையில் மத்திய அரசு உடனடியாக தமிழகத்திற்கு தேவையான ஆக்சிஜனை வழங்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments