Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒருமுறை ஸ்டாலினையும் இப்படி செய்தால் சரியாகிவிடும் - எச்.ராஜா டுவிட்

Webdunia
சனி, 23 ஜூன் 2018 (14:57 IST)
ஆளுநருக்கு எதிராக போராட்டம் செய்த ஸ்டாலினை கைது செய்து கல்யாண மண்டபத்தில் A/C ல் வைத்து விடுதலை செய்வதை விட்டு விட்டு ஒருமுறை இவரையும் நாமக்கல் திமுகவினரை போல் ரிமாண்ட் செய்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா தெரிவித்துள்ளார்.
 
நேற்று நாமக்கல் மாவட்டத்துக்கு தமிழக அளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆய்வுக்கு சென்றிருந்தார். அப்போது திமுகவினர் ஆளுநரின் கார் மீது கருப்புக்கொடி வீசினர். இதனால் திமுகவினரை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 
 
இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின், ஆளுநர் மாளிகை நோக்கி தனது கட்சியனருடன் பேரணி சென்றார். இதனால் போலீசார் ஸ்டாலின் மற்றும் அவரது கட்சி தொண்டர்களை கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

 
 
இது குறித்து பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், ஒரு எதிர்கட்சி தலைவருக்கு சட்டம் தெரிந்திருக்க வேண்டும். இந்திய குற்றவியல் சட்டம் பிரிவு 124 தெளிவாக கூறுகிறது ஜனாதிபதி/ஆளுனரின் மரியாதைக்கு குந்தகம் ஏற்படுத்த நினைத்தால் 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை உண்டு. நாமக்கல் காவல்துறை செயல் சட்டப்படி சரி என்று தெரிவித்தார். மேலும், காலையில் கைது செய்து கல்யாண மண்டபத்தில் A/C ல் வைத்து விடுதலை செய்வதை விட்டு விட்டு ஒருமுறை இவரையும் நாமக்கல் திமுக வினரை போல் ரிமாண்ட் செய்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்