Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டாலினை நோஸ்கட் செய்த மாணவர்கள்: ஆதரவு தெரிவிக்க போனவரை திருப்பி அனுப்பிய இளைஞர்கள்!

ஸ்டாலினை நோஸ்கட் செய்த மாணவர்கள்: ஆதரவு தெரிவிக்க போனவரை திருப்பி அனுப்பிய இளைஞர்கள்!

Webdunia
செவ்வாய், 17 ஜனவரி 2017 (12:36 IST)
தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு எதிரான போராட்டம் மிகவும் தீவிரமடைந்துள்ளனர். மதுரை அலங்காநல்லூரில் நேற்று தமிழகம் முழுவதும் இருந்து திரண்ட மாணவர்கள் இளைஞர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தினர்.


 
 
இரவு முழுவதும் இந்த போராட்டம் நீடித்தது. இதனையடுத்து அவர்களை தமிழக போலீசார் வலுக்கட்டாயமாக அடித்து கைது செய்தனர். இந்த கைது நடவடிக்கையை கண்டித்தும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும் சென்னை மெரினாவில் மாணவர்கள் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
இந்த போராட்டத்தை எந்தவித அரசியல் கட்சியின் சார்பு இல்லாமல் பொதுமக்களாக வெகுண்டெழுந்து நடத்துகின்றனர். இதற்கு தனது ஆதரவை தெரிவிக்க திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் போராட்ட களத்திற்கு சென்றார்.
 
ஆனால் இது அரசியல் கட்சிகள் நடத்தும் போராட்டம் இல்லை எனவே ஸ்டாலினின் ஆதரவு தங்களுக்கு தேவையில்லை என அவரை மாணவர்கள் திருப்பி அனுப்பினர். இது மக்கள் போராட்டம், அரசியல்வாதிகள் போராட்டத்தில் பங்குபெற வேண்டாம் என்று அவர்கள் கோஷம் எழுப்பினர்.
 
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், மாணவர்கள் போராட்டத்திற்கு திமுக ஆதரவு தெரிவிக்கவே வந்தேன். தை மாதம் முடிவதற்குள்ளாவது ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுகொண்டு அந்த இடத்தை விட்டு சென்றார்.
 

திருப்பதி செல்லும் ரயில்கள் ரேணிகுண்டா வரை மட்டும் செல்லும்: தெற்கு ரயில்வே

பங்குச்சந்தை இன்று மீண்டும் உயர்வு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்து, முஸ்லீம்களுக்கு தனித்தனி பட்ஜெட்டா? பிரதமர் பேச்சுக்கு ப சிதம்பரம் கண்டனம்..!

ஓடும் காரில் கூச்சலிட்டு உதவி கேட்ட 15 வயது சிறுமி.. போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சரிவு.. இன்று ஒரே நாளில் இவ்வளவா?

அடுத்த கட்டுரையில்
Show comments