Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஸ்டாலினை நோஸ்கட் செய்த மாணவர்கள்: ஆதரவு தெரிவிக்க போனவரை திருப்பி அனுப்பிய இளைஞர்கள்!

ஸ்டாலினை நோஸ்கட் செய்த மாணவர்கள்: ஆதரவு தெரிவிக்க போனவரை திருப்பி அனுப்பிய இளைஞர்கள்!

ஸ்டாலினை நோஸ்கட் செய்த மாணவர்கள்: ஆதரவு தெரிவிக்க போனவரை திருப்பி அனுப்பிய இளைஞர்கள்!
, செவ்வாய், 17 ஜனவரி 2017 (12:36 IST)
தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு எதிரான போராட்டம் மிகவும் தீவிரமடைந்துள்ளனர். மதுரை அலங்காநல்லூரில் நேற்று தமிழகம் முழுவதும் இருந்து திரண்ட மாணவர்கள் இளைஞர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தினர்.


 
 
இரவு முழுவதும் இந்த போராட்டம் நீடித்தது. இதனையடுத்து அவர்களை தமிழக போலீசார் வலுக்கட்டாயமாக அடித்து கைது செய்தனர். இந்த கைது நடவடிக்கையை கண்டித்தும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும் சென்னை மெரினாவில் மாணவர்கள் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
இந்த போராட்டத்தை எந்தவித அரசியல் கட்சியின் சார்பு இல்லாமல் பொதுமக்களாக வெகுண்டெழுந்து நடத்துகின்றனர். இதற்கு தனது ஆதரவை தெரிவிக்க திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் போராட்ட களத்திற்கு சென்றார்.
 
ஆனால் இது அரசியல் கட்சிகள் நடத்தும் போராட்டம் இல்லை எனவே ஸ்டாலினின் ஆதரவு தங்களுக்கு தேவையில்லை என அவரை மாணவர்கள் திருப்பி அனுப்பினர். இது மக்கள் போராட்டம், அரசியல்வாதிகள் போராட்டத்தில் பங்குபெற வேண்டாம் என்று அவர்கள் கோஷம் எழுப்பினர்.
 
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், மாணவர்கள் போராட்டத்திற்கு திமுக ஆதரவு தெரிவிக்கவே வந்தேன். தை மாதம் முடிவதற்குள்ளாவது ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுகொண்டு அந்த இடத்தை விட்டு சென்றார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அலங்காநல்லூர் மாணவரகளுக்கு ஆதரவாக களத்தில் குதித்த சென்னை மாணவர்கள்