தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் பரப்புரை கூட்டம் குறித்து சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து சமீபத்தில் கூட்டம் ஒன்றில் பேசிய சீமான் “நான் அவ்வளவு பெரிய உச்சத்தை விட்டுவிட்டு வந்தேன் என்கிறார். யார் இவரை வர சொன்னது? நீங்கள் அரசியலுக்கு வர வேண்டும் என ஒரு வாட்ச்மேன் கூட வாசலில் வந்து நிற்கவில்லை. பிறகு எதற்காக வருகிறார்?
என் அன்பு சகோதரர் அஜித்தும், ரஜினிகாந்தும் தங்கள் புகழை வியாபாரம் செய்ய விரும்பவில்லை. அவர்களுக்கு இவரை விட அதிக கூட்டம் வரும். எம்ஜிஆர் ஒன்றரை மணி நேரமானாலும் எழுதி வைக்காமல் பேசுவார். விஜயகாந்த் மனதிலிருந்து மக்களின் குரலாக பேசுவார். ஸ்டாலின் கூட துண்டு சீட்டுதான். ஆனால் எடப்பாடியும், தம்பியும்தான் முழு சீட்டு. இவர்காள் மழையில் பேச முடியாது. ஏனென்றால் சீட்டு நனைந்துவிடும்” என கிண்டலாக பேசியுள்ளார்.
Edit by Prasanth.K