Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈபிஎஸ் முதல்வர் பதவி பறிபோக டீ குடித்த ஸ்டாலின்

Webdunia
புதன், 14 பிப்ரவரி 2018 (10:41 IST)
ஒரு மாநிலத்தின் முதல்வர் பதவியை பறிபோக செய்ய அவருடன் அமர்ந்து டீ குடித்தால் போதுமானது என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

நேற்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்த திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், பேருந்து கட்டணத்தை உயர்த்தாமல் நிர்வாகத்தை சீரமைக்க தனது குழுவினர்கள் கொடுத்த ஆலோசனைகள் அடங்கிய அறிக்கையை அளித்தார். பின்னர் அவருடன் அமர்ந்து ஸ்டாலின் டீ குடித்தார்.

முதல்வர் ஈபிஎஸ் உடன் அமர்ந்து டீ குடித்தது ஏன் என்பது குறித்து நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் ஸ்டாலின் விளக்கினார். ஓபிஎஸ் முதல்வராக இருந்தபோது அவருடன் அமர்ந்து டீ குடித்ததாகவும், அதனையடுத்து அவரது முதல்வர் பதவி பறிபோனதாகவும், அதேபோல் ஈபிஎஸ் முதல்வர் பதவியும் பறிபோகவே அவருடன் அமர்ந்து டீ குடித்ததாகவும் கூறினார். மு.க.ஸ்டாலின் இதனை நகைச்சுவைக்காக தெரிவித்தாலும், இதனை வைத்து நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments