Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டெர்லைட் விவகாரத்தில் இப்படி நடக்கும் என எனக்கு தெரியும்: மு.க.ஸ்டாலின்

Webdunia
புதன், 28 நவம்பர் 2018 (17:35 IST)
ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு மூட உத்தரவிட்டது செல்லாது என்றும், ஸ்டெர்லைட் ஆலையை தொடர்ந்து நடத்த அனுமதிக்கலாம் என்றும் இன்று காலை பசுமைத்தீர்ப்பாயம் அறிக்கை வெளியிட்டது. இந்த அறிக்கையால் தமிழக அரசுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக கருதப்படுகிறது.

இந்த நிலையில், 'ஸ்டெர்லைட் ஆலையை சில நிபந்தனைகளோடு செயல்பட அனுமதிக்கலாம் என தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தருண் அகர்வால் குழு பரிந்துரைத்திருப்பது தமிழக அரசுக்கு ஏற்பட்டிருக்கும் அவமானம் என்றும், இப்படி நடக்கும் என்று எனக்கு ஏற்கனவே தெரியும் என்பதால் தான், அமைச்சரவை கூடி தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தி வந்ததாகவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும் இப்பொழுது ஏற்பட்டுள்ள இந்தப் பிரச்சினைக்கு, ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதில் தமிழக அரசு காட்டிய மெத்தனம் தான் காரணம் என்றும் இனியாவது, தமிழக அரசு முறையான சட்டப் போராட்டத்தை நடத்த வேண்டும் என்றும் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஸ்டெர்லைட் விவகாரத்தில் அதிமுகவும், திமுகவும் ஒருவர் மீது ஒருவர் குற்றஞ்சாட்டுவதை விட்டுவிட்டு ஆக்கபூர்வமாக இணைந்து சட்டப்போராட்டம் நடத்த வேண்டும் என தூத்துகுடி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments