திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் – ஸ்டாலின் சொன்ன அந்த ஒரு வார்த்தை !

Webdunia
திங்கள், 9 டிசம்பர் 2019 (08:51 IST)
திமுகவில் உள்ள சிலரே எடப்பாடி பழனிச்சாமியோடு மறைமுகமான தொடர்பில் உள்ளதாக சொல்லப்படுகிறது.

திமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நேற்று மாலை சென்னையில் ஜெகத்ரட்சகனின் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இதில் திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு பேசினார். உள்ளாட்சித் தேர்தல் சம்மந்தமாக பல விஷயங்கள் இந்தக் கூட்டத்தில் பேசப்பட்டது. கூட்டத்தில் பேசிய ஜெ அன்பழகன், நமது கூட்டணியில் இருக்கும் ஒரு தலைவர் (திருமாவளவன்) எடப்பாடியைச் சந்தித்து பேசியுள்ளார். அவர்களை எல்லாம் கூட்டணியை விட்டுக் கழட்டிவிட்டால்தான் நாம் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெறமுடியும்’ எனக் கூறியதாக சொல்லப்படுகிறது.

இதையடுத்துப் பேசிய ஸ்டாலின் ‘கூட்டணிக் கட்சியினரை விடுங்கள் நமது கட்சியினர் சிலரே எடப்பாடி பழனிச்சாமியோடு மறைமுகமாக தொடர்பில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதை இன்றோடு நிறுத்திவிடுங்கள் என எச்சரிக்கிறேன்.’ எனக் பதிலுறைத்ததாக சொல்லப்படுகிறது. வந்திருந்தவர்கள் அனைவரும் ஸ்டாலின் யாரை சொல்கிறார் என்ற குழப்பத்தில் சென்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆதவ், புஸ்ஸி ஆனந்திடம் சராமரி கேள்விகள்!.. 10 மணி நேரம் சிபிஐ அலுவலகத்தில் நடந்தது என்ன?..

கார்த்திகை தீபம்: திருவண்ணாமலைக்கு 160 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

இஸ்ரேல் பிரதமரின் இந்திய வருகை திடீர் ரத்து.. என்ன காரணம்?

குமரிக்கடலில் உருவானது காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி: தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை!

உங்க வீட்ல எல்லாரும் சினிமா!. கேக்குறவன் கேனையனா இருந்தா!.. விஜயை தாக்கிய கருணாஸ்!...

அடுத்த கட்டுரையில்
Show comments