Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டாலின் முதல்வர்; டிடிவி துணை முதல்வர் –ஜெயக்குமார் சொல்லும் புதிய கூட்டணி

Webdunia
திங்கள், 29 அக்டோபர் 2018 (16:18 IST)
ஸ்டாலினும் டிடிவி தினகரனும் சேர்ந்து அதிமுகவின் ஆட்சியைக் கலைக்க முயற்சி செய்வதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஜெயக்குமாரின் ஆடியோ சர்ச்சை விவகாரம் இப்போதுதான் கொஞ்சம் அடங்கியுள்ளது. அதனால் வழக்கம்போல ஜெயக்குமார் பத்திரிக்கையாளர்களை சந்திக்க ஆரம்பித்துள்ளார்.

இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீதான நெடுஞ்சாலை டெண்டர் ஊழல் விவகாரத்தின் வழக்கை சிபிஐ விசாரிக்க இன்று உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது அது சம்மந்தமாகப் பேசிய ஜெயக்குமார் ‘முதல்வார் ஏற்கனவே கூறியது போல எந்த விசாரனைக்கும் தயாராக உள்ளார். ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தால் அதிமுகவில் உள்ள அனைவரும் சிறைக்கு செல்வது உறுதி எனக்கூறி வருகிறார். இதைக்கேட்டு எங்களுக்குப் புளித்துப்போய் விட்டது. 2021 வரை இதையே சொல்லிக்கொண்டு இருக்க வேண்டியதுதான். 2021-லும் அதிமுகதான் ஆட்சியை அமைக்கும். ஸ்டாலினும் தினகரனும் சேர்ந்து நான் முதல்வராகவும் நீங்கள் துணை முதல்வராக இருந்துகொள்ளலாம் என ரகசியக் கூட்டணி அமைத்து அதிமுக ஆட்சியைக் கலைக்க நினைத்தார்கள். அதை அதிமுக வெற்றிகரமாக முறியடித்து ஆட்சி நடத்திக்கொண்டு இருக்கிறது’ என்றார்.

மேலும் சேலம் சிறுமி கொலை குறித்து பதிலளித்த ஜெயக்குமார் ‘குற்றவாளி யாராக இருந்தாலும் குற்றத்தின் தன்மையைப் பொறுத்து குற்றவாளிக்கு தண்டனை வாங்கித் தரப்படும். ஏற்கனவே தஷ்வந்த் வழக்கில் எங்களரசு விரைவாக செயல்பட்டு குற்றவாளிக்குத் தூக்கு தண்டனை வாங்கிக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது’ என்றார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments