Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அதிமுக-வினர் தில்லுமுல்லுகளில் ஈடுபடுத்தவா, தேர்தல் ஆணையர் மாற்றம் ?- ஸ்டாலின் கேள்வி !

அதிமுக-வினர்  தில்லுமுல்லுகளில் ஈடுபடுத்தவா,  தேர்தல் ஆணையர் மாற்றம் ?- ஸ்டாலின் கேள்வி !
, வியாழன், 14 நவம்பர் 2019 (20:38 IST)
தமிழக மாநில தேர்தல் ஆணைய செயலாளர் எஸ். பழனிசாமியை மாற்றியிருப்பது கண்டனத்திற்குரியது என திமுக தலைவர் ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது :
 
உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணைய செயலாளர் திரு.பழனிச்சாமி அவர்களை, திடீரென்று மாற்றியிருப்பது கண்டனத்திற்குரியது!
 
உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், தேர்தல் பணிகளைச் செய்து கொண்டிருந்தவரை மாற்றியது ஏன்?  
 
மேலும், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் "விசுவாசமாகப்" பணியாற்றியதற்காக விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவர், மாநில தேர்தல் ஆணைய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளாரா?  இது, உள்ளாட்சித் தேர்தலைத் தள்ளிப்போடவா? அல்லது உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக-வினர் ஒட்டுமொத்தமாகத் தில்லுமுல்லுகளில் ஈடுபடுத்தவா? என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்துக்கள் குறித்த சர்ச்சை பேச்சு: வருத்தம் தெரிவித்த திருமாவளவன்