Publish Date: Mon, 16 May 2022 (19:10 IST)
Updated Date: Mon, 16 May 2022 (19:15 IST)
இலங்கையில் தினசரி 15 மணி நேரம் மின்வெட்டு இருக்கலாம் என இலங்கை பிரதமராக பதவியேற்ற ரனில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
அடுத்த இரண்டு மாதங்கள் இலங்கைக்கு மிகவும் கடினமாக இருக்கும் என்றும் இலங்கையில் மின் தட்டுப்பாடு தினமும் 15 மணி நேரம் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்
மேலும் இலங்கை பொருளாதாரத்தை மீட்டெடுக்க சுமார் 75 மில்லியன் அமெரிக்க டாலர் தேவை என்றும், இலங்கை அரசின் விமான நிறுவனமான ஸ்ரீலங்கன் விமான சர்வீஸ் பெரும் நஷ்டத்தில் உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.