Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராமேஸ்வரம் மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை.. வலைகளை வெட்டி சேதம் என தகவல்..!

Mahendran
ஞாயிறு, 28 ஜனவரி 2024 (09:27 IST)
ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படை விரட்டி அடித்ததாகவும் வலைகளை சேதப்படுத்தியதாகவும் வெளி வந்திருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
கடந்த பல ஆண்டுகளாக ராமேஸ்வரம் மீனவர்கள் உட்பட தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை விரட்டி அடிப்பதும் கைது செய்வதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. 
 
இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க மத்திய மாநில அரசுகளுக்கு மீனவர்கள் சங்கம் கோரிக்கை விடுத்து வந்தும் ஒரு சில நடவடிக்கைகளை தவிர ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என மீனவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் இன்று கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டி அடித்ததாகவும்  ஐந்து விசை படகுகளின் வலைகளை வெட்டி சேதப்படுத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 
 
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி மீனவர்களை இலங்கை கடற்படை விரட்டி அடித்ததாகவும் ஒரு படகுக்கு 50 ஆயிரம் முதல் 70 ஆயிரம் வரை வலைகளை வெட்டியதால் சேதம் ஏற்பட்டதாகவும் மீனவர்கள் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் இங்கு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments