Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழக மீனவர்கள் 25 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை.. இந்த அட்டூழியத்திற்கு முடிவே இல்லையா?

தமிழக மீனவர்கள் 25 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை.. இந்த அட்டூழியத்திற்கு முடிவே இல்லையா?

Siva

, திங்கள், 1 ஜூலை 2024 (07:41 IST)
தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் அவ்வப்போது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு வருகின்றனர் என்பது இதை தடுக்க மத்திய மாநில அரசுகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த பல ஆண்டுகளாக மீனவர் சங்கம் கோரிக்கை விடுத்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களும் அவ்வப்போது இது குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதி வருகிறார் என்பதும் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த 25 மீனவர்கள் இன்று இலங்கை கடற்படை கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் நான்கு விசைப்படகுகளையும் அவர்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது தொடர் கதை ஆகி வருவதை அடுத்து மீனவர் சங்கங்கள் கடும் வருத்தத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

Edited by Siva
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிலிண்டர் விலை குறைந்ததாக அறிவிப்பு.. வழக்கம்போல் இல்லத்தரசிகள் அதிருப்தி..!