போலி ஆதார் அட்டை; தமிழகத்தில் சுற்றி திரிந்த அங்கொட லோக்கா! – சிபிசிஐடி விசாரணை

Webdunia
வெள்ளி, 7 ஆகஸ்ட் 2020 (09:19 IST)
இலங்கை நிழல் உலக தாதா அங்கட லோக்கா தமிழகத்தில் உயிரிழந்த நிலையில் சிபிசிஐடி விசாரணையில் அதிர்ச்சிக்குரிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

இலங்கை நிழல் உலக தாதாவான அங்கொட லோக்கா கோயம்புத்தூரில் பிரதீப் என்ற போலி ஆதார் ஐடியை காட்டி தங்கி வந்த நிலையில் சமீபத்தில் மாரடைப்பால் உயிரிழந்தார். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக இலங்கை ஊடகங்கள் சில மாதங்களுக்கு முன்பாக செய்திகள் வெளியிட்டிருந்தன.

இந்நிலையில் அங்கொட லோக்கா தமிழகத்தில் தங்க போலி ஐடி தயாரித்து வழங்கியது மற்றும் உதவி செய்தது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். லோக்காவின் ஆதார் ஐடி போலியானது என தெரிய வந்த நிலையில் மதுரையில் அங்கொட லோக்கா தொடர்பான இடங்களில் சிபிசிஐடியினர் நடத்திய சோதனையில் பல ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓட்டு கேட்க வந்த வேட்பாளரை கல்லால் எறிந்து விரட்டிய பொதுமக்கள்: பீகாரில் பரபரப்பு..!

பொறுத்திருந்து பாருங்கள்.. எல்லாமே சர்பிரைஸாக நடக்கும்: சசிகலா பேட்டி..!

17 குழந்தைகளை கடத்தி பிணை கைதிகளாக பிடித்து வைத்த நபர்.. காவல்துறையின் அதிரடி நடவடிக்கை..!

காலையில் குறைந்த தங்கம், மாலையில் திடீர் உயர்வு.. தற்போதைய நிலவரம்..!

டிரம்பை எதிர்த்து கேள்வி கேட்கும் தைரியம் பிரதமர் மோடிக்கு இல்லை: ராகுல் காந்தி விமர்சனம்

அடுத்த கட்டுரையில்
Show comments