Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மீண்டும் தமிழ்நாடு மீனவர்கள் 8 பேர் கைது.. இலங்கை கடற்படையின் தொடரும் அட்டூழியம்..!

Advertiesment
மீனவர்கள்

Siva

, செவ்வாய், 27 ஆகஸ்ட் 2024 (07:03 IST)
எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழ்நாடு மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை கைது செய்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடைப்பட்ட பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். மீனவர்கள் சென்ற விசைப்படகையும் பறிமுதல் செய்து, அனைவரையும் மன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னால் தான் நாகை மீனவர்கள் 11 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் ராமேஸ்வரம் மீனவர்கள் எட்டு பேர் கைது செய்யப்பட்டு இருப்பதை அடுத்து மீனவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவது தொடர்கதை ஆகி வருகிறது என்பதும் தமிழக முதல்வர் கூட அவ்வப்போது மத்திய அரசுக்கு இது குறித்து கடிதம் எழுதவும் மத்திய அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை என மீனவர் தரப்பினர் தங்களது அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.

Edited by Siva

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரதமர் மோடி திறந்து வைத்த சத்ரபதி சிவாஜி சிலை.. 3 நாள் மழைக்கு தாங்காமல் இடிந்ததா?