Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக மீனவர்களை மீண்டும் பிடித்த இலங்கை கடற்படை! – மக்கள் அதிர்ச்சி!

Webdunia
செவ்வாய், 1 பிப்ரவரி 2022 (08:20 IST)
வங்க கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வங்க கடலில் மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குவது, கைது செய்வதும், படகுகளை சேதம் செய்வதும் தொடர்கதையாகி வருகிறது. சமீபத்தில் இலங்கை கடற்படையால் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட மீனவர்கள் பலரை விடுதலை செய்ய அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் மீண்டும் ஒரு கைது சம்பவம் நடந்துள்ளது. நாகப்பட்டிணத்தை சேர்ந்த மீனவர்கள் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாக அவர்களை கைது செய்துள்ள இலங்கை கடற்படை அவர்களது படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது. இவ்வாறாக பறிமுதல் செய்த படகுகளை சமீபத்தில் இலங்கை அரசு ஏலத்தில் விட்டது தமிழக மீனவர்களிடையே கடும் கண்டனத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10.5% இடஒதுக்கீடு தொடர்பாக அமைச்சருடன் விவாதிக்க தயார்.! சவால் விடும் அன்புமணி..!!

சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரம்: சட்டப்பேரவையில் இருந்து பா.ம.க எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு

விஷச்சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்களில் இளைஞர்கள் அதிகம்: ஆய்வுக்கு பின் குஷ்பு பேட்டி..!

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு அவசியம்..! சட்டப்பேரவையில் தனி தீர்மானம் நிறைவேற்றம்..!!

துர்கா ஸ்டாலினின் சகோதரர் ராஜமூர்த்திக்கு தமிழக அரசின் முக்கிய பதவி.. பரபரப்பு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments