தமிழ்நாடு மீனவர்கள் 21 பேர் கைது.. மீண்டும் அட்டூழியம் செய்யும் இலங்கை கடற்படை..!

Webdunia
வியாழன், 7 டிசம்பர் 2023 (13:47 IST)
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது மேலும் 21 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
கடந்த பல ஆண்டுகளாக எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு வருவது தொடர் கதை ஆகி உள்ளது. இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என மத்திய மாநில அரசுக்கு தமிழக மீனவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 
 
இந்த நிலையில் ராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 21 மீனவர்களை இன்று இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட 21 மீனவர்களில் 13 பேர் புதுக்கோட்டையைச் சேர்ந்தவர்கள் என்றும் 8 பேர் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது. 
 
கைது செய்யப்பட்ட அனைவரிடமும் யாழ்ப்பாணம் துறைமுகத்தில் வைத்து விசாரணை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்!.. காவல்துறை போட்ட கண்டிஷன்!...

விஜய் கட்சிக்கு இன்னொரு எம்.எல்.ஏ ரெடி!.. தவெகவில் இணையும் நடிகர்!....

வரும் திங்கட்கிழமை 149 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.. என்ன காரணம்?

தவெக பொதுக்கூட்டத்திற்கு புதுச்சேரி காவல்துறையின் கடுமையான நிபந்தனைகள்

விமானத் துறையில் இரு நிறுவனங்களின் ஆதிக்கம் ஏன்? ப. சிதம்பரம் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments