12 தமிழக மீனவர்களுக்கு விடுதலை – இலங்கை நீதிமன்றம் உத்தரவு!

Webdunia
புதன், 5 ஜனவரி 2022 (11:39 IST)
வங்க கடலில் மீன்பிடித்த தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களில் 12 பேரை விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வங்க கடலில் கடந்த டிசம்பர் 19ம் தேதியன்று தமிழகத்தின் மண்டபம் பகுதியை சேர்ந்த பல மீனவர்கள் படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை கைது செய்ததுடன், படகுகளையும் பறிமுதல் செய்தனர்.

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 68 தமிழக மீனவர்களையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் மீனவர்கள் கைது குறித்து இலங்கை நீதிமன்றத்தில் வழக்கு நடந்த நிலையில் 12 மீனவர்களை விடுவிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தொடர்ந்து மற்ற மீனவர்களையும் விடுதலை செய்ய நடவடிக்கை தேவை என மீனவர்களின் குடும்பங்கள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டேன்ஸ் ஆடலாம்.. தெருவுல நடந்தால் விஜய்க்கு முட்டி வலிக்கும்!.. மன்சூர் அலிகான் ராக்ஸ்!...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு தடை விதித்தது உச்ச நீதிமன்றம்

பிகாரில் வீசும் அதே அலை தமிழகத்திலும் வீசுகிறது: கோவையில் பிரதமர் மோடி பேச்சு

கருமுட்டையை உறைய வைத்து வேலையில் கவனம் செலுத்துங்கள்: ராம்சரண் மனைவியின் சர்ச்சை கருத்து..!

பிரதமர் மோடியின் காலில் விழுந்து ஆசி பெற்ற ஐஸ்வர்யா ராய்.. புகைப்படம் வைரல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments