Webdunia - Bharat's app for daily news and videos

Install App

12 தமிழக மீனவர்களுக்கு விடுதலை – இலங்கை நீதிமன்றம் உத்தரவு!

Webdunia
புதன், 5 ஜனவரி 2022 (11:39 IST)
வங்க கடலில் மீன்பிடித்த தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களில் 12 பேரை விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வங்க கடலில் கடந்த டிசம்பர் 19ம் தேதியன்று தமிழகத்தின் மண்டபம் பகுதியை சேர்ந்த பல மீனவர்கள் படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை கைது செய்ததுடன், படகுகளையும் பறிமுதல் செய்தனர்.

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 68 தமிழக மீனவர்களையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் மீனவர்கள் கைது குறித்து இலங்கை நீதிமன்றத்தில் வழக்கு நடந்த நிலையில் 12 மீனவர்களை விடுவிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தொடர்ந்து மற்ற மீனவர்களையும் விடுதலை செய்ய நடவடிக்கை தேவை என மீனவர்களின் குடும்பங்கள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

சவுக்கு சங்கருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? காயத்ரி ரகுராம் கேள்வி..!

100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் உண்மையா? மின் வாரியம் விளக்கம்

அதானி நிறுவனத்திற்கு முதலீடு கிடையாது! நார்வே எடுத்த அதிரடி முடிவு! – காரணம் என்ன தெரியுமா?

மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றால் பிளான் B என்ன? அமித்ஷா அளித்த அதிரடி பதில்..!

உயர்கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு உத்தரவு

அடுத்த கட்டுரையில்
Show comments