Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கஞ்சா கடத்தல்; சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது..! – வெளிநடப்பு செய்த எடப்பாடியார் கண்டனம்!

Webdunia
புதன், 5 ஜனவரி 2022 (11:26 IST)
தமிழக சட்டமன்ற கூட்டம் இன்று தொடங்கிய நிலையில் வெளிநடப்பு செய்த எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி திமுக அரசின் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

தமிழகத்தில் புதிய வருடம் தொடங்கிய பின்னர் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்கி நடந்து வருகிறது. கூட்டத்தொடரின் ஆரம்பமாக கவர்னர் உரை வாசிக்கப்பட்டது. அப்போது கவர்னர் உரையை புறக்கணித்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ”தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு கஞ்சா, குட்கா போன்ற பொருட்கள் கடத்தப்படுகின்றன. திமுக அரசு சரியாக செயல்படாததால் சென்னை வெள்ளத்தில் மூழ்கியது. திமுக அரசு மழையால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு எந்த நிவாரணத் தொகையையும் வழங்கவில்லை” என்று குற்றம் சாட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆப்கானிஸ்தான் உள்பட 12 நாட்டினர் அமெரிக்காவில் நுழைய தடை.. என்ன காரணம்?

சென்னையில் இன்று 17 மின்சார ரயில்கள் ரத்து: முழு விவரங்கள்..!

நீட் ரிசல்ட் வரும் முன்பே விண்ணப்பிக்கலாம்.. எம்பிபிஎஸ் படிப்புக்கு விண்ணப்பம் தொடக்கம்..!

கிரிக்கெட்டுக்கு இது ஒரு துயரமான நாள்: 11 பேர் பலி குறித்து அனில் கும்ப்ளே வேதனை..!

பாகிஸ்தானுக்கு சென்று போரிலா ஜெயித்துவிட்டீர்கள்.. ஏன் இந்த கொண்டாட்டம்.. ஆர்சிபி ரசிகர்களுக்கு கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments