Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

13 தமிழ்நாடு மீனவர்களை கைது செய்த சிங்களப்படை: தொடரும் அட்டூழியம்..!

13 தமிழ்நாடு மீனவர்களை கைது செய்த சிங்களப்படை: தொடரும் அட்டூழியம்..!

Siva

, ஞாயிறு, 14 ஜனவரி 2024 (08:12 IST)
தமிழக மீனவர்களை சிங்களப்படை கைது செய்வது தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் இது குறித்து மத்திய மற்றும் மாநில அரசுகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த பல ஆண்டுகளாக மீனவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் புதுக்கோட்டையை சேர்ந்த 13 மீனவர்களை மீண்டும் சிங்களப்படையினர் கைது செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  


புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 13 மீனவர்கள் நேற்று மூன்று படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென சுற்றி வளைத்த சிங்கள படையினர் அவர்களை கைது செய்தனர். மேலும் அவர்கள் காங்கேசன் கடற்கரை முகாமிற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.  

மேலும் மீனவர்களின் இரண்டு படகுகளையும் இலங்கை கடற்படையினர் கைப்பற்றியதாகவும்  கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மீனவர் சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன.

Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காணும்பொங்கலை முன்னிட்டு சென்னையில் போக்குவரத்து மாற்றங்கள்: முழு விபரங்கள்..!