Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரு. 1000 அபராதம் !

Webdunia
வெள்ளி, 26 ஜூன் 2020 (20:04 IST)
தமிழகத்தில் சுமார் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளானர். மக்கள் பாதிப்படைவதைத் தடுக்க அரசு பலவித நடவடிக்கைகளை துரிதமாக எடுத்து வருகிறது.

நேற்று ஒரே நாளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொரொனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிஉலையில், இன்று இதுவரை இல்லாத அளவுக்கு தமிழ்நாட்டில் 2ஆவது நாளாக ஒரே நாள் பாதிப்பு 3 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

எனவே, தமிழ்நாட்டில் கொரோனா தொற்று மொத்த பாதிப்பு எண்ணிக்கை 74,000 தாண்டியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 74,622ஆக உயர்ந்துள்ளது.

கொரொனா பரவலைத் தடுக்க அரசு எல்லா முயற்சிகளையும் முன்னெடுத்து வருகிறது. இந்நிலையில், கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் நீலகிரி மாவட்ட எல்லை மூடப்பட்டுள்ளது.

அங்கு, பொதுஇடங்களில் எச்சில் துப்பினால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படுமென அம்மாவட்ட கலெக்டர் இன்னொசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.

மேலும், முகக் கவசம் அணியாவிட்டால் ரூ.50 அபராதம் எனவும், வணிகநிறுவனங்களில் சமூக இடைவெளியைக் கடைபிடிக்கவில்லை எனில் ரூ.50 கடைபிடிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments