Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் இருந்து கிளம்பிய பயணிகள் விமானத்தில் திடீர் கோளாறு: பெரும் பரபரப்பு

Webdunia
வெள்ளி, 30 நவம்பர் 2018 (10:08 IST)
சென்னையிலிருந்து கேரள மாநிலம் கோழிக்கோட்டிற்கு இன்று காலை 59 பயணிகள் மற்றும் 4 விமான பணியாளர்களுடன் புறப்பட்டு சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக இந்த விமானம் அவசரமாக மீண்டும் சென்னைக்கு திரும்பி அனுப்பப்பட்டது.

இந்த விமானத்தில் பயணம் செய்த 63 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாகவும், 59 பயணிகளும் விமானத்திலிருந்து பத்திரமாக இறக்கப்பட்டு, ஒய்வு அறையில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திட்கள் வெளிவந்துள்ளது. மேலும் இந்த பயணிகளுக்கு மாற்று விமானம் விரைவில் ஏற்பாடு செய்யப்படும் என கூறப்படுகிறது.

மேலும் ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறு குறித்து விசாரணை செய்யப்படுவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த சம்பவத்தால் சென்னை விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

தேர்தல் பரபரப்பு மற்றும் ஐபிஎல்.. தெலுங்கானாவில் மூடப்படும் திரையரங்குகள்..!

இந்தியாவில் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்.. முதல் முறையாக குடியுரிமை பெற்ற 14 பேர்..!

இன்று இரவு 22 மாவட்டங்களில் மழை பெய்யும்: எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments