Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வைகாசி விசாகம்; பழனிக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்! – ரயில்வே அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 10 ஜூன் 2022 (10:58 IST)
பழனியில் வைகாசி விசாக திருவிழா கொண்டாடப்பட உள்ள நிலையில் பயணிகள் வசதிக்காக மதுரை – பழனி இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பழனியில் 12ம் தேதியன்று வைகாசி விசாக திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இதற்காக தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் பழனி கோவிலுக்கு செல்வது வாடிக்கையாக உள்ளது.

இதனால் பயணிகள் வசதிக்காக மதுரை – பழனி இடையே 12ம் தேதியன்று முன்பதிவில்லா ரயில் செயல்படும் என ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயில் மதுரை ரயில் நிலையத்திலிருந்து 10.50க்கு புறப்பட்டு மதியம் 1.25மணிக்கு பழனி சென்றடையும், மீண்டும் பழனியில் இருந்து 2.45 மணிக்கு புறப்பட்டு மாலை 5.10 மணிக்கு மதுரையை சென்றடையும்.

இந்த ரயில் சோழவந்தான், கொடைக்கானல் ரோடு, அம்பாத்துரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

திடீரென சாலையின் நடுவில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்.. வாகனங்கள் சேதம்..!

அன்புமணியை சந்திக்க மாட்டேன்: சென்னை வந்த டாக்டர் ராமதாஸ் பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments