Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வைகாசி விசாகம்; பழனிக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்! – ரயில்வே அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 10 ஜூன் 2022 (10:58 IST)
பழனியில் வைகாசி விசாக திருவிழா கொண்டாடப்பட உள்ள நிலையில் பயணிகள் வசதிக்காக மதுரை – பழனி இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பழனியில் 12ம் தேதியன்று வைகாசி விசாக திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இதற்காக தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் பழனி கோவிலுக்கு செல்வது வாடிக்கையாக உள்ளது.

இதனால் பயணிகள் வசதிக்காக மதுரை – பழனி இடையே 12ம் தேதியன்று முன்பதிவில்லா ரயில் செயல்படும் என ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயில் மதுரை ரயில் நிலையத்திலிருந்து 10.50க்கு புறப்பட்டு மதியம் 1.25மணிக்கு பழனி சென்றடையும், மீண்டும் பழனியில் இருந்து 2.45 மணிக்கு புறப்பட்டு மாலை 5.10 மணிக்கு மதுரையை சென்றடையும்.

இந்த ரயில் சோழவந்தான், கொடைக்கானல் ரோடு, அம்பாத்துரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மத்திய அரசு அதிக நிதியை ஒதுக்கியும் சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள்: பிரதமர் மோடி

பிரதமர் மோடியின் இலங்கை பயணம்.. சில நிமிடங்களில் 14 தமிழக மீனவர்கள் விடுதலை..!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பா?

ராமேஸ்வரம் பாலம் திறப்பு விழாவில் கலந்து கொள்ளாதது ஏன்? முதல்வர் ஸ்டாலின் விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments