Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

Webdunia
ஞாயிறு, 18 அக்டோபர் 2020 (18:02 IST)
தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு சிறப்பு ரயில்
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இன்னும் ரயில்வே துறையில் இயல்பு நிலை திரும்பவில்லை. தற்போதைக்கு சிறப்பு ரயில்கள் மட்டுமே இயங்கி வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு பண்டிகை கால சிறப்பு ரயில் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
 
இதன்படி மதுரையில் இருந்து பிகானேருக்கு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை - பிகானேர் இடையே அக்டோபர் 22, 29 மற்றும் நவம்பர் 05, 12, 19, 26 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
 
அதேபோல் ராமேஸ்வரத்தில் இருந்து புவனேஸ்வர் மற்றும் நெல்லையில் இருந்து ஜாம்நகர் இடையே பண்டிகை கால சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது
 
மேலும் சென்னை- கயா, புவனேஷ்வர்- புதுச்சேரி ஆகிய மார்க்கங்களிலும், சென்னை-கயா சிறப்பு ரயில்களும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்கள் பண்டிகை காலங்களில் சொந்த ஊர் செல்லும் பயணிகளுக்கு உதவும் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை.. சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு தடையா?

நீலகிரி மாவட்டத்தில் வெளுத்து வாங்கும் கனமழை.. ஊட்டி மலை ரயில் ரத்து..! எத்தனை நாட்களுக்கு?

இன்று முதல் வரும் 21ம் தேதி அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அடுத்த கட்டுரையில்
Show comments