Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆடிகிருத்திகையை முன்னிட்டு சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

Webdunia
புதன், 20 ஜூலை 2022 (14:49 IST)
ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு திருத்தணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது
 
திருத்தணியில் உள்ள முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகை அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்நிலையில் பக்தர்களின் வசதியை முன்னிட்டு ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு நாளை முதல் ஜூலை 25ஆம் தேதி வரை ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. சிறப்பு ரயில் குறித்த முழு தகவல்கள் இதோ
 
 
பயணிகள் சிறப்பு ரெயில் (வண்டி எண்: 43407/43418) அரக்கோணத்தில் இருந்து காலை 10.20 மணிக்கு புறப்பட்டு காலை 10.40 மணிக்கு திருத்தணி வந்தடையும். மீண்டும் இந்த ரெயில் திருத்தணியில் இருந்து காலை 10.50 மணிக்கு புறப்பட்டு, காலை 11.08 மணிக்கு அரக்கோணம் வந்தடையும்.
 
பயணிகள் சிறப்பு ரெயில்(43413/43422) அரக்கோணத்தில் இருந்து மதியம் 1 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.20 மணிக்கு திருத்தணி வந்தடையும். மீண்டும் இந்த ரெயில் திருத்தணியில் இருந்து மதியம் 1.30 மணிக்கு புறப்பட்டு, மதியம் 1.48 மணிக்கு அரக்கோணம் வந்தடையும். 
 
பயணிகள் சிறப்பு ரெயில்(43415/43426) அரக்கோணத்தில் இருந்து மதியம் 2.50 மணிக்கு புறப்பட்டு மதியம் 3.10 மணிக்கு திருத்தணி வந்தடையும். மீண்டும் இந்த ரெயில் திருத்தணியில் இருந்து மதியம் 3.20 மணிக்கு புறப்பட்டு, மதியம் 3.38 மணிக்கு அரக்கோணம் வந்தடையும்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வல்லரசு நாடுகளின் போர்களால் மக்களிடையே அன்பு மறைந்துவிட்டது! - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வேதனை!

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு.. சம்பளம் ரூ.2,73,500 வரை.. எப்படி விண்ணப்பிப்பது?

கால் டாக்சி ஓட்டுனர்களை கொன்ற சீரியல் கொலைகாரன்.. 24 ஆண்டுகளுக்கு பின் கைது..!

முதலமைச்சர் சொல்லியும் கல்வி கட்டணத்தை தள்ளுபடி செய்யாத பள்ளி நிர்வாகம்.. 7ஆம் வகுப்பு மாணவியின் ஐ.ஏ.எஸ் கனவு என்ன ஆகும்?

தவெக உறுப்பினர் சேர்க்கை பயிற்சி பட்டறை! அடுத்த கட்ட பாய்ச்சலில் விஜய்!

அடுத்த கட்டுரையில்
Show comments