Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறப்பு தொழுகை நடத்த அனுமதி கிடையாது! – தள்ளுபடி செய்த நீதிமன்றம்

Webdunia
வெள்ளி, 22 மே 2020 (11:25 IST)
ரம்ஜான் அன்று சிறப்பு தொழுகை நடத்த அனுமதி கேட்டு உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனு தள்ளபடி செய்யப்பட்டது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் நான்காம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. மே இறுதி வரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மே 25 அன்று இஸ்லாமிய பண்டிகையான ரம்ஜான் கொண்டாடப்பட இருக்கிறது. ரம்ஜான் பண்டிகையின்போது மக்கள் தங்கள் வீடுகளிலேயே தொழுகை நடத்துமாறு தலைமை ஹாஜி அறிவுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் ரம்ஜான் அன்று மதுரையில் உள்ள மசூதிகளில் 2 மணி நேரம் மட்டும் சிறப்பு தொழுகைக்கு அனுமதி அளிக்குமாறு சாகுல் ஹமீது என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு அளித்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள் வழிபாட்டு தலங்களை திறப்பதன் மீதான முடிவுகள் மத்திய மற்றும் மாநில அரசினை சார்ந்தவை என்றும், இதனால் நீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிட முடியாது என்றும் கூறி மனுவை தள்ளுபடி செய்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments