Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் டெங்கு பாதிப்பு.. 10,000 சிறப்பு முகாம்கள் நடத்த திட்டம்..!

Webdunia
ஞாயிறு, 29 அக்டோபர் 2023 (10:46 IST)
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் தற்போது டிசம்பர் மாதத்தில் பத்தாயிரம் சிறப்பு முகாம்கள் நடத்த திட்டமிட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார்
 
டிசம்பர் மாதத்தின் 5 ஞாயிறுகளிலும் மழைக்கால சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது எனவும், தமிழ்நாடு முழுவதும் 10,000 சிறப்பு முகாம்கள் நடைபெறுவது இதுவே முதல் முறையாகும் என்றும் சென்னை எம்.ஜி.ஆர் நகரில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
அளித்தார்.
 
மேலும் ஒவ்வொரு மருத்துவமனையிலும் தனி டெங்கு வார்டு அமைக்கப்பட்டுள்ளது எனவும், 2023ம் ஆண்டில் இதுவரை டெங்கு பாதிப்பால் 7 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், காய்ச்சல் சளி, இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால், பொதுமக்கள் அதனை அலட்சியப்படுத்தாமல் தீவிர சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டு கொண்டார்.
 
மேலும் மழைக்காலத்தை எதிர்கொள்ள மருத்துவமனைகளில் கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீரென வெடித்த குப்பைத்தொட்டி.. வீசியெறியப்பட்ட தொழிலாளி பரிதாப பலி! - என்ன நடந்தது?

தாயை கொன்றுவிட்டு தற்கொலை செய்துக் கொண்ட மகன்! கடைசியில் நடந்த திருப்பம்!

8 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு! விரைவில் அதிகரிக்கும் வெயில்! - வானிலை ஆய்வு மையம்!

சாதி ஆணவ படுகொலைகளுக்கு காரணம் திருமாவளவன்தான்! - எச்.ராஜா பரபரப்பு குற்றச்சாட்டு!

சரிந்து விழுந்த 150 அடி உயரமான தேர்! தமிழர் உட்பட இருவர் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments