Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று முதல் 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்.. தமிழக போக்குவரத்து துறை அறிவிப்பு..!

Mahendran
வெள்ளி, 24 மே 2024 (11:43 IST)
முகூர்த்த நாள் மற்றும் வார விடுமுறை காரணமாக இன்று முதல் மூன்று நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது 
 
வெள்ளி, சனி, ஞாயிறு வார விடுமுறை மற்றும் முகூர்த்த நாளை முன்னிட்டு சென்னையில் இருந்து தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு கூடுதலான பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை கழக மேலாண் இயக்குனர் தெரிவித்துள்ளார் 
 
சென்னை கிளம்பாக்கத்தில் இருந்து தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கு இன்று 535 பேருந்துகளும், நாளை 595 பேருந்துகளும் கூடுதலாக இயக்கப்படும் என்றும் அதேபோல் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய பகுதிகளுக்கு இன்றும் நாளையும் 130 பேருந்துகள் கூடுதலாக இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது 
 
தினசரி இயங்கக்கூடிய பேருந்துகளுடன் இந்த பேருந்துகள் கூடுதலாக இயங்கும் என்றும் தேவைப்பட்டால் மேலும் அதிகமாக பேருந்துகளை இயக்கப்படும் என்றும் போக்குவரத்து துறை மேலாண் இயக்குனர் தெரிவித்துள்ளார் 
 
மேலும் இந்த சிறப்பு பேருந்துகளுக்கு முன்பதிவு செய்ய தமிழக அரசின் போக்குவரத்து துறையின் இணையதளம் மற்றும் மொபைல் செயலியின் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார். 
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்த 21 பேரின் உடல்கள் ஒரே இடத்தில் தகனம்..! சோகத்தில் மூழ்கிய மக்கள்..!!

பொய் வழக்கு போடுவதில் காட்டும் கவனத்தை கள்ளச்சாராயத்தில் காட்டுங்கள் சவுக்கு சங்கர் கோஷம்..!

தலைவா என்னை காப்பாற்றுங்க.. கள்ளக்குறிச்சி சென்ற விஜய்யிடம் ரசிகர் கோரிக்கை..!

ஆபரேஷன் தியேட்டரில் பாலியல் அத்துமீறல்..! அரசு மருத்துவர் உல்லாசம்..! நடவடிக்கை பாயும் என அமைச்சர் உறுதி.!!

கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் குடும்பத்திற்கு பாஜக நிதி உதவி..! அண்ணாமலை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments