10-ம் வகுப்பு மாணவரின் மாற்றுச்சான்றிதழில் பெண் குழந்தை புகைப்படம்: பெற்றோர் வாக்குவாதம்..!

Mahendran
வெள்ளி, 24 மே 2024 (11:40 IST)
10-ம் வகுப்பு படிக்கும் மாணவரின் மாற்று சான்றிதழில் பெண் குழந்தையின் புகைப்படம் இருப்பதை பார்த்து அந்த மாணவர் அதிர்ச்சி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன
 
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே முகமது இர்பான் என்ற 15 வயது மாணவர் புதுப்பேட்டை அரசு ஆண்கள் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்ற நிலையில் அவர் பிளஸ் ஒன் படிப்பதற்காக மாற்றுச் சான்றிதழ் மற்றும் மதிப்பெண் சான்றிதழை வாங்கினார்.

அப்போது அவர் தனது மாற்றுச் சான்றிதழை பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தார். ஏனெனில் அதில் தன்னுடைய புகைப்படத்திற்கு பதிலாக பெண் குழந்தையின் புகைப்படம் இருந்தது. இதனை அடுத்து அந்த மாணவர் தனது பெற்றோருடன் சென்று பள்ளி அலுவலக ஊழியர் இடம் காண்பித்து விளக்கம் கேட்டபோது அந்த சான்றிதழை பிடுங்கி கிழித்து குப்பை தொட்டியில் போட்டதாக தெரிகிறது.

இதனால் மாணவரின் பெற்றோர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் ஆன்லைனில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக இந்த தவறு நடந்து விட்டதாகவும் வேறொரு மாற்றுச் சான்றிதழ் வழங்க ஏற்பாடு செய்வதாக கூறினர்.

இதை ஏற்றுக்கொள்ளாத பெற்றோர் கிழித்து குப்பையில் இருந்த மாற்று சான்றிதழை  சேகரித்து கல்வித்துறை கல்வித்துறையில் புகார் அளித்துள்ளதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மாதமாக மிரட்டி தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்: ஈபிஎஸ் கண்டனம்..!

விஜய் கிரிக்கெட் பால் மாதிரி!.. அவருக்குதான் என் ஓட்டு!.. பப்லு பிரித்திவிராஜ் ராக்ஸ்!...

20 வருடங்களாக வைத்திருந்த உள்துறையை பாஜகவுக்கு தாரை வார்த்த நிதிஷ்குமார்.. என்ன காரணம்?

7ஆம் வகுப்பு மாணவி பள்ளி மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு: ஆசிரியர்கள் மீது பெற்றோர் குற்றச்சாட்டு

கோவை மெட்ரோ.. திருப்பி அனுப்பிய மத்திய அரசின் அறிக்கையில் 3 முக்கிய விளக்கம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments