Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆயுத பூஜை விடுமுறை: 2 நாட்கள் சென்னையில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

Webdunia
வியாழன், 29 செப்டம்பர் 2022 (16:51 IST)
ஆயுத பூஜை விடுமுறைக்காக சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்பவர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக தமிழக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. 
 
ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகை ஆகியவை காரணமாக அக்டோபர் 4 மற்றும் 5ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் காந்தி ஜெயந்தி அக்டோபர் இரண்டாம் தேதி அரசு விடுமுறை வருவதால் மூன்றாம் தேதி மட்டும் விடுமுறை போட்டால் ஐந்து நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்பவர்களுக்கு வசதியாக நாளை மற்றும் நாளை மறுநாள் இரண்டு நாட்கள் 2100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. 
 
சென்னையில் இருந்து வெளியூர் செல்ல இதுவரை 40 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளதாகவும் 30-ஆம் தேதி முதலே பெரும்பாலானோர் முன்பதிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் கோயம்பேடு, தாம்பரம், பூந்தமல்லி ஆகிய பகுதிகளில் இருந்து இயக்கப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments